தேசிய நூலக வாரியம்

தமிழில் சேர்க்கப்படும் பிறமொழிச் சொற்களைச் செல்வங்கள் என வருணித்த பிரபல தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாடன், அத்தகைய செல்வங்கள் தமிழுக்குத் தரப்படுவதன் காரணம் அயலகத் தமிழ் இலக்கியப் படைப்புகள் எனப் பாராட்டினார். 
ஜூரோங், ஹார்பர்ஃபிரண்ட் வட்டாரங்களின் கலாசார, வரலாற்றுச் சிறப்புகளை உணர்த்தும் நோக்கத்துடன் ‘க்லூ: கியூரியோசிட்டி’ எனும் தொழில்நுட்பக் கண்காட்சி ஜூரோங் வட்டார நூலகம், ஹார்பர்ஃபிரண்ட் நூலகத்தில் திறந்துள்ளது.
இவ்வாண்டு அல்லது சென்ற ஆண்டு இறுதியில் மறைந்த ஒன்பது தமிழ் எழுத்தாளர்களை நினைவுகூர்ந்த ‘நினைவின் தடங்கள்’ நிகழ்ச்சி, தேசிய நூலக வாரியக் கட்டடத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 9) நடைபெற்றது.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய நூலக வாரியம், அரசாங்க சேவை மன்றத்துடன் (சிவில் சர்விஸ் கிளப்) இணைந்து, 1965ஆம் ஆண்டு அவர் சில மாத காலம் தங்கி நேரம் செலவிட்ட ‘சாங்கி காட்டேஜில்’ நாட்டை உருவாக்கிய திரு லீயின் சுயசரிதை மேற்கோள்களால் நிறைந்த முனையை நிறுவியுள்ளது.